இலங்கை வன்னி மண்ணில், மண்ணின் உரிமை காத்திடும் உறுதி பூண்டு, ‘உண்டேல் சுதந்திரம் இன்றேல் இல்லை வாழ்வு' என்ற முழக்கத்தை முன்வைத்து இறுதிவரை வீரங்காட்டிப் போராடிய பண்டாரக வன்னியனின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளது இவ்வரலாற்றுப் புதினம். வீரம், விவேகம், தியாகம் இவை எந்தத் திசையிலிருந்து ஒளி உமிழ்ந்தாலும் அவற்றைப் போற்றிப் புகழ்க்காவியம் படைக்க வேண்டும் என்னும் கலைஞரின் விருப்பத்தின் வெளிப்பாடு.