கருணா என்ற பெயரில் கலைஞர் எழுதிய குறும்புதினம் இது. சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்பைச் சொல்கிறது. கலைஞரின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘அரும்பைப் பாதுகாக்கும் இரு இலைகளும் உதிர்ந்துவிடுமோ என்ற நிலை இருந்தது. இப்போது மீண்டும் இரு இலை ஒரு மொட்டு ஆகிவிட்டது: இந்தப் புதிய ஆரம்பம் இனி... இரு இலை இரு மொட்டு என்று ஆவதற்கான இன்ப ஆரம்பமாகவும் இருந்தது' எனலாம்.