தமிழகத்தின் வரலாறு, அரசியல், பண்பாடு, இலக்கியம் போன்ற அனைத்தும் பதிவுசெய்யப்பட்ட பேழைகளாய்த் திகழ்ந்து நிற்பவை கலைஞரின் கடிதங்கள். அரசியல் அடிப்படையில் உருவானவை எனினும் இலக்கிய மணம் கமழாக் கடிதம் எதுவுமில்லை என்னும் சிறப்புப் பெற்றவை. இந்த வகையில், 1968 முதல் 1977 வரை மறவன் மடல், நம்நாடு ஆகிய வார ஏடுகளிலும் முரசொலி நாளேட்டிலும் கலைஞர் எழுதிய 370 கடிதங்களில் 32 கடிதங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.