வெள்ளிக்கிழமை என்பது வாரத்தின் எல்லா நாள்களையும் போன்று ஒரு நாள்தான். வெள்ளிக்கிழமைக்கென்று தனிச்சிறப்பு ஏதும் கிடையாது என்பதை விளக்குவதுடன், சமூகத்தின் அபாயகரமான ஒரு சூழலில் சிக்கித் தவித்த ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது இப்புதினம். வெள்ளிக்கிழமை அன்று ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வு எவ்வாறு பாழ்ப்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.