சீமான் வீட்டுச் செல்வி மிகவும் சின்னபுத்திக் காரியாக இருக்கிறாள். அவள் தன்னுடைய உடல் சுகத்திற்காக அபலைப் பெண் குமுதாவின் வாழ்க்கையைக் கெடுத்த கொடுமையைச் சொல்கிறது இந்தக் குறும்புதினம். இழிந்த சமூகத்தின் கிழிந்த திரையை விலக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் பொருந்தா மணத்தால் விளையும் சீர்கேடுகளும், அழகு சிந்தும் இளம் வனிதையர்களின் எழில் நிறைந்த வாழ்க்கையை நரைத்துப்போன வாலிபக் கிழங்களோடு பிணைக்க முயலும் போக்கும், அதனால் வரும் விபரீதங்களும் சித்திரிக்கப்பட்டுள்ளன.