தாய்மைப் பேற்றின் உயர்வைக் காட்டும் வகையில் எழுதப்பெற்ற இச்சிறுகதை, தான் பெற்ற மகளுக்குப் பால் கொடுத்தால் அழகும் இளைமையும் போய்விடும் என்று எண்ணும் சௌந்திரியைக் காட்டுகிறது. கருவைச் சுமந்தவள் தாயாக மாட்டாள்; அதைப் பேணி வளர்ப்பவளே தாயாவாள் என்பதை உணர்த்தும் கதை இது.