தமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.
பல்லவர் கோயில்களில் மிகவும் தொண்மையானவை மகேந்திரவர்மன் கா...